உடுமலை, பிப்.7 - உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் வட மாநில தொழிலாளர்க ளுக்கு குறைந்த கூலி தந்து வேலை வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். தேங்காய் உறிக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை உள்ளூர் தொழிலாளர்கள் 7 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், உடு மலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் அதிக வேலை வாய்ப்பை தரும் தென்னை விவசா யத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங் களில் பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு கேட்டுக் கடந்த மாதம் வருவாய் கோட்டாட்சியரிடம் தேங்காய் உறிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு தந்த நிலை யில், தேங்காய் வியாபாரிகள் சில இடங்க ளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் வட மாநில தொழிலாளர்க ளுக்கு குறைந்தகூலி தந்து வேலை தருவ தால் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. இதைத் தொடர்ந்து, அனைத்து தேங்காய் உறிக்கும் தொழிலா ளர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என கோட்டாட்சியர் அலுவ லகத்தை உள்ளூர் தொழிலாளர்கள் முற்று கையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து போராட்டம் நடத்திய தொழி லாளர்களிடம் கேட்டபோது,
கடந்த மாதம் வரை ஒரு தேங்காய் உறிக்க 82 பைசா தரப் பட்டது. எங்களுக்கு வேலை செய்யும் இடங்க ளில் குடிநீர் மற்றும் மருத்து வசதி தேவை யென்று கேட்டபோது வியாபாரிகள் வட மாநில தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி யாக 50 பைசா மட்டும் கொடுத்து தேங்காய் உறிக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். இத னால் கடந்த மாதம் முதல் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஏமாற்றும் வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் உறிக்கும் தொழி லாளர்களாக உள்ள வட மாநில தொழிலாளர் களுக்கும், ஏற்கனவே நடைமுறையில் இருக் கும் தேங்காய் ஒன்றுக்கு 82 பைசா கூலி தர வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர். தேங்காய் உறிக்கும் தொழிலாளர்க ளைப் பழிவாங்குவதாக நினைத்து தேங்காய் வியாபாரிகள் வட மாநில தொழிலாளர்களை வைத்துத் திட்டமிட்ட உழைப்பு சுரண்டல் நடத்துவதையும், பல ஆயிரக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்களை பாதிக் கும் வகையில் நடந்து கொள்ளும் வியாபாரி கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனை யில் மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக் கையை விரைவில் எடுக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள் ளது, என்று கூறினர்.