முதுகுளத்தூர், நவ.2- இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந் தையில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அளிக்காமல், புதிய வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அளிப்பதை கண்டித்து முதுகுளத்தூர் வாரச்சந்தை வளாகம் முன்பு இராமநாத புரம் மாவட்ட வாரச்சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. பின்னர் வார சந்தை ஒப் பந்ததாரரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் வாரச்சந்தை வளாகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐ டியு மாவட்டப் பொருளாளர் முத்து விஜயன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்ட வார சந்தை வியா பாரிகள் சங்க தலைவர் ராமு, செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் ஆலடி ஈஸ்வ ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.