districts

img

கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம் பாஜக மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

செங்கல்பட்டு, ஜூலை 5- செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை காலில் சுட்டு காவல்துறை யினர் கைது செய்த னர். அப்போது அவ ரது கையில் இருந்த தோட்டாக்களுடன் கூடிய கைத் துப்பாக்கியையும் பறிமுதல்செய்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாஜக மாநில  வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் தான், தனக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததாக சீர் காழி சத்யா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகா ரத்தில் அலெக்சிஸ் சுதாகர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனால், பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.