திருமங்கலம், பிப்.27- ரயில் பயணியை “தூக்கிவிடுவேன்“ என மிரட்டிய தோடு அவரது தவறை சுட்டிக் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜையும் வசைபாடி, அவரை ரயி லில் இறங்கி இறக்கிவிடுவேன் என மிரட்டிய பாஜக பிர முகர் நாராயணன் திருப்பதியைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஆர். மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.செல்லக்கண்ணு, வி.உமாமகேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் சொ.பாண்டியன், ஜி.முத்துராமன், ஆண்டவர், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன், வி.பிச்சைராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.