ஒட்டன்சத்திரம், செப்.15- ஒட்டன்சத்திரத்தில் பாஜக தலைவர் அண்ணா மலையை வரவேற்பதற்காக பாஜக தொண்டர்கள் சாலையில் நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போ க்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப் பட்டனர். நடைபயணம் என்ற பெய ரில் வெள்ளியன்று மாலை ஒட்டன்சத்திரத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வருகை புரிந்தார். இதற் காக, ஒட்டன்சத்திரம் சோத னைச்சாவடி யிலிருந்து நக ருக்குள் செல்லும் பழனி சாலையில் பாஜக தொண்டர் கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலையை மறித்து நின்றனர். இதனால் ஒட்டன்சத்தி ரம் நகருக்குள் அவசரமாக மருத்துவமனை செல்லும் நோயாளிகள், மார்க்கெட்டு க்கு காய்கறிகளை கொண்டு சென்ற விவசாயிகள், ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி செல்லும் பேருந்துகள் கடந்து செல்லமுடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி யடைந்தனர்.