districts

img

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பிரச்சனை விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டு எச்சரிக்கை விளக்கு பொருத்தப்படும்

திண்டுக்கல் எம்.பி, காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

சின்னாளபட்டி, ஏப்.18- திண்டுக்கல்-மதுரை நான்கு  வழிச்சாலையில் காந்தி கிரா மத்திற்கும் செட்டியபட்டிக்கும் இடையே சின்னாளபட்டி நக ருக்குள் செல்வதற்காக நான்கு வழிச் சாலையின் நடுவில் தடுப் புச்சுவர் அமைக்கப்படாமல் இருந்தது. சின்னாளபட்டிக்கு  செல்லும் வாகனங்கள் இந்த வழி யில் சென்று வந்தன. இதே வழி யாக எதிர் திசையிலும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இத னால் அடிக்கடி விபத்துகள் ஏற்  பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஒரே வருடத்தில் ஒன்பது உயிரி ழப்புகள் ஏற்பட்ட நிலையில் மாவட் டக் காவல்துறை இரும்புத் தடுப்பு கள் வைத்து அந்த இடத்தை அடைத்தது.  இதனால் காந்திகிராம பல்க லைக்கழகம் செல்லும் பணியா ளர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில் திங்களன்று சின்னாளபட்டி வந்த திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுச் சாமியிடம் சின்னாளபட்டி பொது மக்கள் மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் “நான்குவழிச் சாலையில் அமைக்கப்பட்ட பேரி கார்டுகளை நிரந்தரமாக நீக்க உதவ வேண்டு மென கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வேலுச்சாமி நேர டியாக அந்த இடத்தை ஆய்வு செய்து, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனி வாசனிடம் பேசி பிரச்சனையில்  லாத பட்சத்தில் அதை அப்பு றப்படுத்த கேட்டுக்கொண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் விபத்தை தடுப்பதற் கான அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும், எச்ச ரிக்கை விளக்குகள் அமைக்கப் படும். தடுப்புகள் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.