கடமலைக்குண்டு, ஜுலை.25- தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலசுப்ரமணியபுரம் ஓடையின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளில் நீர் விழும் இடத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மண்ணரிப்பு அதிகமாகி தடுப்பணை சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்ணரிப்பை தடுக்கும் வகையில் இரண்டு தடுப்ப ணைகளிலும் நீர் விழும் இடத்தில் சிமெண்டு கலவை மூலம் பலப்படுத்த ஒன்றிய அதிகாரிகள் உத்தரவிட்ட னர். அதன் பேரில் கடந்த 2 நாட்களாக சீரமைப்பு பணி கள் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.