மதுரை, பிப்.22- தமிழகம் அறிந்த பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் 82 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 22 புதனன்று மதுரை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் நேரில் சந்தித்து சால்வை அணி வித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், மத்திய ஒன்றாம் பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டா லின், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா. நரசிம்மன், ஜெ. லெனின் மற்றும் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள், மார்க்சிம் கார்க்கி படிப்பக தோழர்கள், வாலிபர், மாண வர் சங்கத்தினர் ஆகியோர் ஞானஒளிவு புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர். ‘மதவாதத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட வேண்டும். அதற்கான பணியினை நீங்கள் செய்து வரு கிறீர்கள். இது மிகவும் பாராட்டுக்குரி யது. தொடர்ந்து இப்பணியை செய்யுங் கள். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன்’ என்று கூறினார். கட்சிக்கு வளர்ச்சி நிதியாக 10 ஆயிரம் ரூபாயை மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், பகுதிச்செய லாளர் வை.ஸ்டாலின், மாமன்ற உறுப்பி னர் வை.ஜென்னியம்மாள் ஆகியோரி டம் வழங்கினார்.