இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க செல்லத் தடை
இராமேஸ்வரம், ஜூலை 18- இராமேஸ்வரத்தில் சூறைக்காற்று வீசுவதால் மீன பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகிறது. இந்த நிலையில்,பாக்நீரினை கடல் பகுதி யில் வழக்கத்தை விட சூறை காற்று வீசுவதால் மீன வர்கள் பாதுகாப்பு கருதி இராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீனவர்கள் புதன் கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப் பட்டுள்ளது.
சதுரகிரி மலையில் தீ விபத்து
திருவில்லிபுத்தூர், ஜூலை 18- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். முக்கிய தினங்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று மாலை 6 மணி முதல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் நாவல் ஊத்து பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப் பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டனர். மேலும் தீயை அணைக்க 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் மலை பகுதிக்கு சென்றனர். தீ விபத்தால் மலை யேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின்னரே மலை மேல் இருந்த பக்தர்கள் பத்திரமாக கீழே அனுப்பப்பட்டனர்.
சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்திற்கான அமைப்புக் கூட்டம்
தேனி, ஜூலை 18- சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்திற்கான அமைப்புக் கூட்டம் தேனியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேனி ஆர்.கஸ்தூரி நினைவகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக டி.கண்ணன், துணை ஒருங்கிணைப்பாளர்களாக ராம்குமார், சி.முனீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், குறைந்தபட்ச ஊதியம் ரூ 26,000 வழங்கக் கோரியும், சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்றக்கோருதல் உட்பட 16 அம்ச கோரிக்கைகளை முன்னி றுத்தி ஜூலை 27 அன்று மாவட்ட தலைநகர் தேனியில் பிரச்சாரம் இயக்கம் நடத்துவது, ஆகஸ்ட் 1 சென்னையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் திரளாக பங்கேற்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பெரியகுளம் திமுக எம்எல்ஏவிடம் பணம் பறித்த நபர் கைது
தேனி, ஜூலை 17- பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமாருக்கு வீடியோகால் மூலம் ஆபாசவீடியோ அனுப்பி பணம் பறிப்பில் ஈடுபட்டவரை தேனி சைபர் கிரைம் காவல் துறையினர் ராஜஸ்தானில் கைது செய்தனர். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார். இவருக்கு கடந்த 1 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்தது. அதில் ஒரு பெண் ஆபாசஉடையுடன் பேசி உள்ளார். சிறிதுநேரத்தில் சரவணக்குமார் அந்த அழைப்பை துண்டித்துள்ளார். பின்பு அவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு பதிவு வந் துள்ளது. இதில் எம்எல்ஏ.வுடன் பெண் ஒருவர் ஆபாச மாக இருப்பது போன்ற சித்தரிப்பு வீடியோ இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவரிடம் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. தராவிட்டால் சமூகவலைதளங் களில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.இத னைத் தொடர்ந்து இரண்டுமுறை தலா ரூ.5ஆயிரம் அனுப்பி உள்ளார். சிலநாட்களில் மீண்டும் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபடுவதை அறிந்த அவர் தேனி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் ரங்கநாயகி தலைமை யிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் வீடியோகால் வந்த தொலைபேசி எண், பணம் அனுப்பப்பட்ட வங்கிக்கணக்கு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் எம்எல்ஏ.வை மிரட்டிய கும்பலின் தொலை பேசி எண் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ரங்க நாயகி தலைமையிலான தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். அங்கு உள்ளூர் போலீஸாருடன் விசா ரணையில் ஈடுபட்டனர். இதில் அல்வார் மாவட்டம் கோவிந்த்கர்க் பகுதியைச் சேர்ந்த அர்ஷத்(34) என்ப வர் மிரட்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் அவரை கைது செய்தனர்.