திண்டுக்கல், ஆக.10- திண்டுக்கல் மாவட்டம் அய்ய லூரில் உள்ள திம்மினி குளத்தை ரியல் எஸ்டேட் காரர்கள் கபளீகரம் செய்து வருகிறார்கள். இதனால் இப்பகுதி விவசாயம் அழிவுக்குள் ளாகி உள்ளது. அய்யலூரின் அடையாளமாக உள்ள மிக முக்கியமான நீராதாரம் திம்மினி குளமாகும். இந்த குளத் தைச் சுற்றி ரியல் எஸ்டேட்காரர்கள் நிலங்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்யத் துவங்கிவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து திம்மினி குளத்தையும் கபளீகரம் செய்யும் அபாயம் உள்ளது. 29 ஏக்கர் விஸ்தீர ணம் கொண்ட இந்த குளத்திற்கு வரும் தண்ணீரால் 50 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் ரியல் எஸ்டேட்காரர் களின் கண்களை உறுத்திக்கொண் டுள்ளது.
மனுக்களுக்கு மரியாதையில்லை
இது தொடர்பாக முன்னாள் பேரூ ராட்சி கவுன்சிலர் எம்.கே.சம்சுதீன் கூறுகையில், திம்மினிகுளம் அய்ய லூர் மக்களின் நீராதாரத்திற்கு முக்கி யமான குளமாகும். இந்த குளத்தை பாதுகாப்பது இந்த பகுதியில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்ப தற்கு ஒப்பாகும். இந்த குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிர மிப்புகளை அகற்றிட வேண்டும் என்று 20க்கும் மேற்பட்ட மனுக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. முத லமைச்சரின் தனி அலுவலகத்திற் குக்கூட மனுக்கொடுக்கப்பட்டுள் ளது. ஆனால் அரசு கண்டுகொள ளாத நிலையில் இந்த குளம் ஆபத் துக்குள்ளாகி உள்ளது. இந்த குளத் தின் தண்ணீர் மேற்கு நோக்கி பாய்கி றது. இந்த தண்ணீர் தீத்தாக்கிழவனூ ரில் உள்ள முராரி சமுத்திரத்திற்கு சென்று, பிறகு குடகனாற்றில் கலக்கி றது. தனியார் குளங்களில் கூட நீரா தாரங்கள் அழிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் அதிபார்களால் பிளாட்டு கள் பிரிக்கப்பட உள்ளன. தற்போது மோர்பட்டி குளம் அதன் கரை உடைக்கப்பட்டு பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு உட னடியாக இந்த பிரச்சனையில் தலை யிட்டு குளங்களை பாதுகாக்க வேண்டும். திம்மினி குளத்தை முக்கியமாக பாதுகாக்க வேண்டும் என சம்சுதீன் கூறினார்.
தக்காளிக்கு பெயர் பெற்ற அய்யலூர்
இப்பகுதியில் தக்காளி, மற்றும் கண்வலிக்கிழக்கு ஆகியவை பிர தான பயிர்களாக உள்ளன. பல ஆயி ரம் டன் தக்காளிகள் இங்கிருந்து பிற மரிநலங்களுக்கும், தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கும் செல்கிறது. கண்வலிக்கிழக்கு மூலம் இப்பகுதி மக்கள் ஓரளவு வருவாய் ஈட்டி வருகிறார்கள். மிக அரிய விளை பொருளாக இப்பகுதியில் தான் பழு பாகற்காய் விளைகிறது. இந்த நீர்நிலைகளுக்கு வரும் நீர் வரத்து சரி யாக வரும் பட்சத்தில் இந்த குளங்க ளைச் சுற்றியுள்ள விவசாய நிலங்க ளில் தக்காளி சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால் நீர் வரத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் மறுகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக குளங்களுக்கு வரும் தண்ணீர் தடைபட்டுள்ளதால் இப் பகுதி விவசாயிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆயிரம் அடிக்கு கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து போதிய தண்ணீரின்றி விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ள னர். குடிப்பதற்கு கூட இப்பகுதி மக்க ளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.
பராமரிப்பின்றி பட்டா குளங்கள்
வெகுண்டெழுந்த விவசாயிகள் அய்யலூர் பகுதியில் குப்பி நாயக்கன்குளம், கொண்டமநாயக் கன்குளம், முத்தமநாயக்கன்குளம், அப்பிநாயக்கன்குளம், அழகரக் காள் குளம், நல்லானம்பலம் குளம், முத்துக்குமாரபிள்ளை குளம், என பல தனியார் பட்டா குளங்களும் இந்த பகுதியில் உள்ளன. இந்த குளங்களுக்கு வர வேண்டிய நீர்வரத்துகள் அடைக்கப்பட்டுள் ளன. இந்த குளங்கள் மிக முக்கிய மான மழை சேகரிப்பு குளங்கள் போல உள்ளன. இதனால் தனியார் குளங்களும் பராமரிப்பின்றி உள்ளது. வறண்டு கிடக்கின்றன. தனியார் பட்டா குளமானாலும் அந்த குளத்திற்கு நீர் வரத்தை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
தேவாங்கு சரணாலயத்திற்கு எதிராக
அரிய விலங்கான தேவாங்குக்கு 11 ஆயிரம் ஹெக்டேரில் அய்யலூர் கடவூர் பகுதியில் சரணாலயம் அமைய உள்ளது. இந்தியாவிலேயே முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்களால் தேவாங்கு வாழ்வதற்கான அமைதி யான சூழல் மாற்றப்பட்டு மரங்கள் அழிக்கப்பட்டு புதுப்புது வீடுகள் முளைக்கத் தொட்ங்கிவிடும். எனவே அரசு திம்மினிக்குளம் உள் ளிட்ட இப்பகுதியின் குளங்களை பாதுகாப்பது மிக மிக அவசிய மாகும்.
வெகுண்டெழுந்த விவசாயிகள்
திம்மினி குளத்தை ரியல் எஸ்டேட் காரர்கள் ஆக்கிரமிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை அர சிடம் இல்லை. ரியல் எஸ்டேட் நிறு வனங்கள் அத்துமீறி வாய்க்கால் வரத்துகளில் கட்டுமானப்பணிகளை செய்கிறார்கள். குளத்திற்கான நீர்வழிப்பாதைகள் அடைக்கப்படு கின்றன. எனவே திம்மினி குளம் உள்ளிட்ட இப்பகுதி நீர்நிலைகளை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்களின் நட வடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். குளத்தின் நீர்வழிப்பாதை யை தடுத்த ரியல் எஸ்டேட் நிறுவ னங்களின் மீது சட்ட ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முடிமலை ஆறு மற்றும் கோம்பை ஆற்று நீர்த்தேக்கத்தை மராமத்து செய்து, குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்கால்களை சீர் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும். ரெங்கப்ப நாயக்கர் குளத்திலிருந்து திம்மினி குளம் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேங்கன் தலைமை வகித்தார். குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர சாமிநட ராஜன், மாவட்ட நிர்வாகிகள் எம். ராமசமி, என்.பெருமாள்,பி.செல்வ ராஜ் சிபிஎம் சார்பாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி. முத்துச்சாமி,மாவட்டக்குழு உறுப்பி னர் சி.குணசேகரன், ஒன்றியச்செய லாளர் எம்.மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இலமு, திண்டுக்கல்