districts

img

ஒன்றியம் கொத்தபுளி ஊராட்சியில் கிராமப்புற மக்களின் அனைத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுளி ஊராட்சியில் கிராமப்புற மக்களின் அனைத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது .ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கே.முருகேசன்  துவக்கி வைத்தார். கொத்த பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரங்கசாமி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்  கே.பாலபாரதி,  சேர்மன் சிவ குருசாமி ஆகியோர் முன்னிலை வகி த்தனர்  . போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஒன்றிய கவுன்சிலர் அமுதவல்லி ஆறுமுகம் நன்றி கூறினார்.