திருவில்லிபுத்தூர், அக்.15- சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் இணைந்து அத்திகுளம் கிராமப்புற மக்களுக்கு தொழில் முனை வோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் த.செண்பக மூர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஆர்.சுதா பெரியத்தாய், யுபிஏ ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி, விருது நகர் டிஐசியின் பொதுமேலாளர் எல்.ராம சுப்ரமணியன், வழக்குரைஞர் பி.ராஜ கோபால், விரிவுரையாளர் பீட்டர் நிர்மல் ராஜ், பி.ராஜசுரேஷ்வரன், செந்தில்குமார், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் ஒருங்கிணைப்பாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். இதில் மாணவர்கள் மற்றும் அத்தி குளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.