மதுரை, டிச.4- மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவின் சார்பில், மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் தடுப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி செவ்வாயன்று நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர்விந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், உலக அளவில், பல்வேறு மோசடி குற்றங்கள் நடக்கின்றன. மாணவர்களுக்கு உதவித் தொகை வாங்கி தருவதாக வங்கி விவரம் கேட்டு, நடைமுறை செலவிற்கென குறிப் பிட்ட தொகையை பெற்று ஏமாற்றுகின்ற னர். பகுதிநேர வேலை வாய்ப்பு வழங்கு வதாக கூறி, நிர்வாக கட்டணம் பெயரிலும் மோசடி நடக்கிறது. சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் கமெண்ட்டில் உதவிகேட்பது போன்ற மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களும் நடக்கின்றன.
குறுக்கு வழியில் பணம் கிடைக்கிறது என்றால், நாம் தான் யோசிக்கவேண்டும். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க மக்கள் விழிப்பு ணர்வுடன் இருக்கவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கருப்பையா பேசுகை யில், கடந்த 2021-ல் சைபர் கிரைம் பிரிவு முழுமையாக தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் முதலாண்டில் 513 புகாரில் ரூ.70 லட்சம் மோசடியும், 2022-ல் 3.57கோடி மோசடியும், 2023-ல் 1306 புகார்களில் ரூ.6.15 கோடி மோசடியும், 2024 நவம்பர் வரையிலும் 1456 புகார்களில் ரூ. 12 கோடி பண மோசடியும் நடந்துள்ளது.
சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் நமது விவரங்களை சேகரித்து வைத்துக் கொண்டு நம்மை நம்ப வைத்து மோசடி செய்கின்றனர். நாமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 2021-ல் இருந்து இது வரை சைபர் குற்ற வழக்குகளில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 77 பேர் பட்டதாரிகள், 25 பேர் எம்.பி.ஏ., முதுநிலை பட்டதாரிகள். சைபர் குற்றச் செயல் குறித்த புகார்களை விசாரிக்கும் போது, சில நேரத்தில் நெருங்கிய உற வினர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டி ருப்பது தெரிக்கிறது. அவர்களை விடுவிக்க பாதிக்கப்பட்டோரே தங்களது புகார்களை திரும்ப பெற முயற்சித்தாலும் விடுவ தில்லை. அவர்களை கைது செய்துவிடு வோம். பண இழப்பு நேரிடும்போது, 24 மணி நேரத்திற்குள் 1930-ல் புகார் அளித்தால் பணத்தை மீட்டிடலாம்.