மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் அடங்கிய ராட்சத விழிப்புணர்வு பலூனை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பறக்கவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, ஆணையர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.