விழிப்புணர்வு பேரணி திருவில்லிபுத்தூர், ஆக.26- திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு தாளாளர் ஆர்.வெங்கடாசலபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர் ஆனந்த், பள்ளி முதல்வர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன் பேரணியை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர்கள் போதை பொருட்களை ஒழித்து மக்களை காப்பாற்றுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.