districts

img

மதிமுக தொழிற்சங்கத் தலைவர் எஸ்.மகபூப் ஜானுக்கு விருது

மதுரை, ஜன. 20 - தமிழர் ஆய்வு மையத்தின் சார்பில் பொங்கல் விழா ; தமிழ்  அறிஞர்கள் மற்றும் சாதனையாளர் களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பொங்கலன்று பத்திரிகையாளர் சங்கத்தில் இவ்வமைப்பின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.இராசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மறுமலர்ச்சி தொழிலா ளர் முன்னணியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ்.மகபூப் ஜானுக்கு தொழிற்சங்க பணிகளைப் பாராட்டி மதுரை மாநகர துணை மேயர் தி.நாகராஜன் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். முனைவர் கு. ஞானசம்பந்தன் விழாவில் கலந்து கொண்டு விருதுபெற்ற தமிழ் அறி ஞர்கள் மற்றும் சாதனையாளர்களைப் பாராட்டி சிறப்புரையாற்றினார். விழாவில் மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குநர் ஹென்றி திபேன், மதுரை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் கதிரவன், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் முனைவர் வெ.அழகப்பன், தமிழர் ஆய்வு மையம் வழக்கறிஞர் முனியன் சமம், குடிமக்கள் இயக்கம் ப.சண்முக வேலு, உயர்நீதிமன்ற முதன்மை வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.