இராமநாதபுரம்,மே.14- இந்திய நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சராக இருந்த அபுல்கலாம் ஆசாத் நினைவாக ஆண்டு தோறும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தலைமையில் கல்வி ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நான்காம் ஆண்டு கல்வி ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி தனியார் மகாலில் ஞாயிற்றுகிழமை நடை பெற்றது. இதில், கே.நவாஸ்கனி எம்.பி., தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொரு ளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில், கல்வியில் சிறந்த பயிற்சியாளர்,ஆசிரியர், மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ரத்னா விருதுகளை கே.நவாஸ்கனி எம்.பி., வழங்கி னர். இந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தலைவர் வருசை முகமது,மாவட்ட செயலாளர் முகமது பைசூல், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி,மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.