இராமநாதபுரம், ஆக.3- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் ஆகஸ்ட் 3 அன்று தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை-கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன் னிலையில் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசு கையில், தமிழ்நாடு முதலமைச்சர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 18 அன்று வருகை தந்து மீனவர்களுடனான மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீனவர்களின் கோரிக்கைகளை நேரடியாக சந்தித்து கேட்டறி கிறார். வளைகுடா பகுதியில் மீன் பிடி தொழிலையே பிரதான தொழி லாக இருந்து வரும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாத்து நலன் காக் கும் முதலமைச்சராக உள்ளார். அன்றைய தினம் மீனவர்களுக் கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். ஆகஸ்ட் 18 அன்று நடைபெறுகின்ற மீனவர்கள் மாநாட்டில் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கும் மற்றும் குந்துகால், நாலுபனை, பாம்பன் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் இராமநாத புரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பர மக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், சென்னை தலைமை பொறியாளர் மீன்பிடி துறைமுகம் வி.ராஜு அவர்கள், மாவட்ட வரு வாய் அலுவலர் இரா.கோவிந்த ராஜலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவள்ளி மற்றும் அரசு அலுவலர்கள், மீன வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.