தேனி, மே 18- கம்பம் அருகே வரதட்சணைக் கொடுமை காரணமாக குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்ப வத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது . கம்பம் அருகில் உள்ள நாராய ணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரிய கருப்பன்(60). இவர் திராட்சை தோட் டத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அருண்பாண்டியன்(29). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவப்பிரியா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாகித்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. மகன் காதல் திருமணம் செய்ததால் தனது மரு மகளிடமிருந்து வரதட்சணை கிடைக்கவில்லை என்று அருண் பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சிவப் பிரியா, இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார். வரதட்சணை கேட்டு மாம னார் பெரியகருப்பன், மாமியார் ஒச் சம்மாள் மற்றும் நாத்தனார் கனி மொழி ஆகியோர் தொடர்ந்து கொடு மைப்படுத்தியதால் மனவேதனை யில் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாமனார் பெரிய கருப்பனுக்கும், சிவப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் தனது மருமகள் மற்றும் பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர் களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்த னர். உடல் கருகிய நிலையில் உயி ருக்கு போராடிய தாய் மற்றும் மகனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.
ஆனால் வழியிலேயே 2 வயது குழந்தை உயிரிழந்தான். இது குறித்து ராயப்பன்பட்டி காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. மேலும் அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவப்பிரியாவிடம் தேனி மாஜிஸ்தி ரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக வும், தன் மீதும், தனது மகன் மீதும் பெட்ரோல் ஊற்றி மாமனார் எரித்த தாகவும் கூறினார். இதனைத்தொட ர்ந்து ராயப்பன்பட்டி போலீசார் அருண் பாண்டியன் உள்பட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து பெரியகருப் பனை கைது செய்தனர். மற்றவர் களை தேடி வருகின்றனர். மாதர் சங்கம் கோரிக்கை சம்பவத்தை அறிந்த மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, மாவட்ட துணைச்செயலாளர் எஸ். மீனா ஆகியோர் தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் இது குறித்து வெண்மணி கூறுகையில், வரதட்சணைக்காக கொடூர கொலை நடந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.