உடுமலை, பிப்.19- உடுமலை அமராவதி ஆற்றின் கரைப்பகுதியல் நதிக்கரை நாகரிகம் இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைத்துள்ளதாக உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், அம ராவதி சங்க காலம் முதல் ஓடிக்கொண்டி ருப்பது கரைவழி நாகரிகம் புத்தகத்தின் மூலம் உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தினர் ஏற்கனவே பதிவு செய்துள்ள னர். இந்நிலையில், மீண்டும் சங்க இலக் கிய கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வாழ்ந்த குமணன் பற்றிய ஆய் வுகளை மேற்கொண்டதில் குமணன் துறை எனப்படும் கல்லாபுரம் அமரா வதி நதிக்கரையில் கற்திட்டைகள் மற்றும் கருப்பு சிவப்பு ஓடுகள் கண்ட றியப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வ றிஞர் மூர்த்தீஸ்வரி கூறும்போது, ஆன் பொருநை எனப்படும் அமராவதி நதி ஈரா யிரம் ஆண்டு காலம் பழமையானது. இந்த நதிக்கரையில் தான்கரைவளி நாடுகளும், ராஜராஜ வள நாடுகளும் இருந்தமைக்கான சான்றுகள் கல்வெட் டுகளின் வாயிலாக உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கரை வளி நாடு புத்தகத்தில் விரிவாகவும், விளக்கமாகவும் ஆவணப்படுத்தப்பட் டுள்ளது. இதில் கல்லாபுரம் அமராவதி நதியோரத்தில் குருவிக்களத்திற்கும் குமணன் துறைக்கு அருகில் மாராக்கா பாறை எனுமிடத்தில் இருபது வரிகளுக் கும் மேலான கல்வெட்டு எழுத்துக்கள் இருப்பதும், ஸ்லஸ்ஸ்ரீ எனும் எழுத் தோடு துவங்கி எழுதப்பட்டுள்ளது. முதல் நான்கு வரிகள் அரசர்களைப் பற் றியும், அதற்கடுத்த வரிகள் தொடர்ச்சி யில்லாமல் சிதிலமடைந்தும் காணப்படு கிறது. இதிலிருந்து தெரிவது என்ன வென்றால் இந்தப் பகுதி கோயில்மேடு எனும் சொற்களும், தானங்கள் கொடுத் தமைக்கான எழுத்துக்களும் இருப்பதற் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இந்தக் கோயில் மேட்டுக்கு அரு கில் கடந்த காலங்களில் வழிபாட்டுச் சிற்பங்கள் இருந்ததும், பின்னாட்களில் அழிமாட்டம் ஆனதையும் உறுதிப்படுத் துகின்றனர். மேலும், பெரிய பெரிய கற்தூண்கள் இன்றும் அந்த இடத்தில் அப்படியே இருப்பதையும், பெரிய கற்திட்டைகள் இருந்தமைக்கான சிதிலமடைந்த கற் பாறைகளும் ஆங்காங்கே இருப்பதை வைத்து உறுதிப்படுத்த முடிகிறது என்றும் பெருங்கற்கால மக்கள் பயன்ப டுத்திய கற்கோடரிகள் இருப்பதும் அதை மக்கள் வழிபாடு செய்ததையும் சிதிலமடைந்த கற்களை கோயில் மேட் டில் வைத்து வழிபடுவதை வைத்து அறிய முடிகிறது என்று அவர் கூறி னார். மேலும் அமராவதி நதிக்கரை குறித்த கள ஆய்வில் உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வி. கே.சிவகுமார், அருட்செல்வன், பிரதீப், ருத்ரபாளையம் ராஜாராம் ஆகியோ ரும் உடனிருந்தார்கள்.