districts

img

சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வாலிபருக்கு பாராட்டு விழா

 சின்னாளப்பட்டி, டிச.17- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பிள்ளை யார்நத்தம் ஊராட்சி நாட்டார்பட்டி கிராமத்தில் த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மகன் சிவராஜ் (32) . இவர் சென்னையில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் சர்வதேச அளவில் மூத்தோர் தட களப்போட்டிகள் நேபாளத்தில்  உள்ள போகரா விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து திண்டுக்கல், திருச்சி, இராமநாதபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 9 பேர்  கலந்து கொண்டனர்.  100 மீட்டர் ஓட்டப்  பந்தயம், நீளம் தாண்டுதல் , ஈட்டி எறிதல்  போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நாட்டார் பட்டியை சேர்ந்த சிவராஜ் சர்வதேச அளவில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.   இவரை தேசிய அளவில் உள்ள  தலைவர்கள் மற்றும் அதிகாரி கள் பாராட்டினர். சொந்த ஊருக்கு திரும்பிய  வீரருக்கு கிராம மக்கள்  வாண வேடிக்கைகளுடன் மேளதாளம் முழங்க  வரவேற்பளித்தனர்.   இதுகுறித்து சிவராஜ் கூறுகையில்,  சிறிய  கிராமத்தில் இருந்து நேபாளம் வரை சென்று வெற்றி பெற்றதில் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதில் பெருமகிழ்ச்சியாக இருந்தது, இதேபோன்று வரும் காலத்  தில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியில் போட்டி யிட்டு பல்வேறு பரிசுகளை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எனது கிராமத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், ஒலிம்பிக் போட்டி யில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசு பல்வேறு உதவிகள் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.