வெம்பக்கோட்டை, ஆக.,11- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கருப்பு, வெள்ளை நிறத்துடன் கூடிய சதுர மற்றும் உருண்டை வடிவிலான மெரு கூட்டும் கற்கள், சுடுமண் மூடியு டன் கூடிய பானை மற்றும் சுடுமண் சல்லடையும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரிசல்குளம். இங்குள்ள உச்சிமேட்டு காட்டில் ஏற்க னவே முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றது. அதில் தங்க அணிகலன் உள்ளிட்ட ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது இரண்டாம் கட்ட அகழ்வா ராய்ச்சி பணியும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அதிலும் தங்க அணிகலன், ஆண் உருவ சுடுமண் பொம்மை, யானை தந்த பகடைக்காய், சுடுமண் அகல்விளக்கு, சுடுமண் வணிக முத்திரை, சுடு மண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு, சுடுமண் அணிகலன், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசி மணிகள் உள்ளிட்ட எண்ணற்ற வகையிலான தொன்மை யான பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கருப்பு, வெள்ளை நிறத்துடன் கூடிய சதுர மற்றும் உருண்டை வடிவிலான அரைக்க பயன்படுத்தும் மெருகூட்டும் கற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இதனுடன் சுடுமண் மூடியுடன் கூடிய பானை மற்றும் சுடுமண் சல்லடையும் கண்டெடுக்ககப்ட்டுள்ளது. அகழாய்வு குழியில் 40 சென்டிமீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த மெருகூட்டும் கல் மற்றும் பானை உள்ளிட்டவை தொன்மையான வர லாற்றை பறைசாற்றுவதாக உள்ளதா கவும், மேலும், இங்கு சங்கு கலைப் பொருட்கள் உற்பத்தி கூடத்தில் சங்கு வளையல்களை சலிக்க சல்லடையும், வளையல்களை மெருகூட்ட கற்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.