இராஜபாளையம், ஆக.13- போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு திங்களன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப் பட்டது. அதையொட்டி இராஜபாளையம் உட்கோட்டம் முழுவதும் வட்டாட்சியர் ஜெயபாண்டி, டிஎஸ்பி அழகேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், போக்கு வரத்து காவல் ஆய்வாளர் சீமான் உள்ளிட்ட அனைத்து காவல் அதிகாரிகளும் தலா ஒரு கல்வி நிறுவனம் என திட்டமிட்டு ஒரே நேரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களி லும் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்ற னர். பள்ளி, கல்லூரி ஆசிரிய - ஆசிரியை கள், மாணவ -மாணவியர் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.