மதுரை, மார்ச் 19- அங்கன்வாடி ஊழியர்-உதவி யாளர் குழந்தைகளின் நலன்களை பாதுகாப்பதில் மட்டுமல்ல குழந் தைகளுக்கான தேவையை அர சிடம் கேட்டுப்பெறுவதில் சளைக் காமல் போராடுபவர்கள் என புகழா ரம் சூட்டினர் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன். மதுரையில் 2022-ஆம் ஆண்டு அகில இந்திய அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் மாநாடு மது ரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் அயராது பாடுபட்ட அங் கன்வாடி ஊழியர்-உதவியாளர், சிஐடியு மாவட்ட, மாநில நிர்வாகி கள் மற்றும் வெகுஜன அரங்கங்க ளின் தலைவர்கள், நிர்வாகிகளை பாராட்டும் நிகழ்வு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராஜன், சிஐடியுவில் அங் கம் வகித்துள்ள தனிச்சங்கங்களில் முதன்மையானது அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கம் தான். தாங்கள் குழந்தைகளின் நலன் களைப் பாதுகாப்பதில் மட்டு மல்ல குழந்தைகளுக்கான தேவை யை அரசிடம் கேட்டுப்பெறுவதில் சளைக்காமல் போராடுபவர்கள். குழந்தைகளின் நலன்களுக்காக குரல் கொடுக்கும் தாங்கள் உங்களது கோரிக்கைகளுக்காக வும் குரல் கொடுத்து வருகிறீர்கள். வீட்டில் குழந்தைகளை தாய்மார் கள் கவனித்துக் கொள்கிறார்கள். அங்கன்வாடிக்கு வரும் குழந்தை களை நீங்கள் தாய் போல் பாது காக்கிறீர்கள்.
மதுரையில் நடைபெற்ற 10-ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 11-வது அகில இந்திய மாநாட் டிற்குள் நிறைவேறவேண்டும். உங்களது கோரிக்கைகளுக்கு வெற்றி கிட்டும்போது இன்னும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைவார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கையை நீங்கள் அதிக ரிக்க வேண்டும். அதற்கு உங்க ளின் செயல்பாடுகளும் பரந்துபட்டு அமைய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல; சளைத்தவர்கள் அல்ல; யாரிடமும் நீங்கள் தலைகுணிந்து நிற்கவேண்டிய அவசியமும் இல்லை. உங்களது நடவடிக்கை கள் உங்களது அமைப்பிற்கு மட்டு மல்ல, சிஐடியு அமைப்பின் வளர்ச்சிக்கும் உதவும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், விரை வில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாய்ப்புள்ள மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் பொறுப்பிற்கு வந்து நேர்மையாக-வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி மற்ற வர்களுக்கு கூட்டுறவு சங்கங்க ளின் மூலம் கிடைக்கும் பலன் களைப் பெற்றுத் தர வேண்டும் என்றார் நிகழ்வில் சிஐடியு மாநில உதவிப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், கோபிகுமார், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, அங்கன்வாடி ஊழியர்-உதவியா ளர் சங்க மாநிலத் தலைவர் எஸ். ரத்தினமாலா, மாநில பொதுச் செய லாளர் டி.டெய்சி, மாநிலப்பொரு ளாளர் எஸ்.தேவமணி. மதுரை மாவட்டத் தலைவர் பி.ராஜேஸ் வரி, மாவட்டச் செயலாளர் ஏ.வர லெட்சுமி, மாவட்டப் பொருளாளர் பி.ரமேஸ்வரி, சிஐடியு தலை வர்கள் இரா.தெய்வராஜ், இரா.லெனின், பொன்.கிருஷ்ணன், கே. அரவிந்தன், ஜி.கௌரி, ஜெ. லூர்துரூபி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.