districts

பணி அழுத்தம் காரணமாக அங்கன்வாடி பணியாளர் தூக்குப் போட்டு தற்கொலை

மதுரை, அக்.10-  மதுரையில் உயரதிகாரிகளின் பணி அழுத்தம் காரணமாக அங்கன்வாடி பணியா ளர் கடிதம் எழுதிவைத்து தூக்குப் போட்டு  தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாநகர் சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியை சேர்ந்தவர் அம்சவள்ளி (42). இவரின் கணவர் பாலமுருகன் கடந்த  2013-ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் மகன் சூரியநாரயணனுடன் அதே பகுதி யில் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த அம்சவள்ளிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு அங்கன்வாடி மைய  பணியாளருக்கான ஆணை கிடைத்தது. இதனையடுத்து சிம்மக்கல் மைக்கேல் தெரு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்துவந்தார்.  இந்நிலையில், அம்சவள்ளிக்கும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல ருக்கும் இடையே பிரச்சனை இருந்துவந்த நிலையில் பணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள் ளது. இதனிடையே அம்சவள்ளி பயன் படுத்திய லேப்டாப் உள்ளிட்டவற்றை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எடுத்து சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான  அம்சவள்ளி திங்களன்று தூக்குப் போட்டு  தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளக்குத்தூண் காவல்துறையின ருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அம்சவள்ளி எழுதிவைத்த கடிதம் கிடைத்தது. 

அந்த கடிதத்தில், ‘‘என் மன உளைச்ச லுக்கு நான் வேலை பார்க்கும் இடத்தில் தான்  எடுத்த முடிவுக்கு சிடிபிஓ (குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்) சிடிபிஓ காரணம்.  என் தற்கொலைக்கு அவர்கள் மட்டும் தான்  காரணம் என எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அடுத்த பக்கத்தில் சூர்யா மன்னிச்சிடு என்று எழுதியுள்ளார். இந்நிலையில் தனது தாயாரின் தற்கொலைக்கு காரணமான குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மகன் சூரிய நாராயணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே அங்கன்வாடி மைய பணியாளரின் தற்கொலைக்கு காரணமான “குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்” மற்றும் பிசி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்கொலை செய்துகொண்ட அம்சவள்ளியின் மகனுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கூறி அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை முன்பு அங்கன்வாடி மைய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த உடலை எடுத்து சென்றபோது, அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்காமல் உடலை எடுக்கக் கூடாது என கூறி வாக்குவாதம் ஏற்பட்டது.  இதுகுறித்து அங்கன்வாடி மைய  பணியாளர்கள் கூறுகையில், அங்கன்வாடி களில் தேவையான சிலிண்டர்களுக்கான பணம், கட்டிட வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட எந்தவித வசதிகளையும் செய்து கொடுக்காமல் அங்கன்வாடி ஆவண பதி வேற்றம் தொடர்பான பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ள அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். 

ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அங்கன்வாடி பணியாளர்கள் அங்கன்வாடி வாடகை, சிலிண்டர், மின் கட்டணம் ஆகிய வற்றை தங்களது ஊதியத்தில் இருந்து செலுத்தும் நிலையே உள்ளது.  மேலும் உயரதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என டார்கெட் என கூறி அழுத்தம் கொடுப்பதோடு குழந்தை கள் முன்பாகவும், பொது இடத்தில் வைத்தும்  அவதூறாக பேசுவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதனால் தான் இது போன்ற தற்கொலை நடந்துள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரி வித்தனர். இது போன்று அங்கன்வாடி பணியாள ரின் தற்கொலைக்கு காரணமான உயரதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடுவதால் எதிர்காலத்தில் எங்க ளுக்கே மன உளைச்சல் தருவார்கள் எனவும் வேதனை தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக அரசு ஊழி யர்களுக்கு பணி அழுத்தம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், மதுரையில் அங்கன்வாடி பணியாளர்கள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவத்தால் தாயை இழந்து நிற்கும் மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.