districts

img

சிஐடியு போராட்ட அறிவிப்பால் அங்கன்வாடி மையம் அமைக்க உறுதி

இராஜபாளையம், ஜூன் 10- விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டி ஞானி யார்கோவில் தெரு அங்கன்வாடி மையத்தை புதிதாக கட்டித் தரக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஜூன் 14 அன்று காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். அதில், 60  நாட்களுக்குள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிக் கொடுக்கப்படும் என்று உறுதி யளித்தனர். இதனால் போராட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சிகள் மற்றும் மேல  ராஜகுல ராமன் ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன், சிஐடியு சார்பில் ஆர்.சோமசுந்தரம், எம்.முனியாண்டி, எஸ் .ஜீவா னந்தம், கே.சஞ்சீவிநாச்சியார் கலந்து கொண்டனர்.