districts

‘கலைஞர் நூலகத்தில் திறந்தவெளி அரங்கு அமைக்கப்படும்’

மதுரை,செப்.7- மதுரை கலைஞர் நூற்றா ண்டு நினைவு நூலகத்தில் திறந்தவெளி அரங்கு அமை க்க, விரைவில் பணிகள் தொடங்கும் என்று தமிழக  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில், அமைச் சர் எ.வ.வேலு செப்டம்பர் 7 அன்று  காலையில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகளின் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் தொடங்கப்பட்டு கடந்த ஓராண்டில் 11 லட்சத் திற்கும் மேற்பட்ட பார்வையா ளர்கள் வருகை தந்து பயன் பெற்றுள்ளனர். 

இந்நிலையில் பொது மக்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பல் வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப் பீட்டில் திறந்த வெளி அரங்கு அமைக்க திட்டமிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோ ரப்பட்டு விரைவில் இப்பணி கள் தொடங்கப்படும். அதே போல வாசகர்கள் தாங்கள் கொண்டுவரும் சொந்த புத்த கங்களை வாசிப்பதற்கு ஏது வாக ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. மேலும் நூலக கட்டடத்தில் பொதுப்பணித் துறையின் மூலம் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.