districts

img

சட்டவிரோதமான பட்டாசு தயாரிப்பில் வெடிவிபத்து

சிவகாசி, அக்.2-                                    சிவகாசி அருகே சட்ட விரோதமாக காலி மனையில்  செட் அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது.  பூசாரித்தேவன்பட்டி. இங்கு செல்வம் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது அதை எம்.புதுப்பட்டி யைச் சேர்ந்த திருப்பதி என்பவர் வாடகைக்கு பெற்று  அதில் செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுத் தயா ரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில்  பட்டாசு தயா ரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென  ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடு பட்டிருந்த உரிமையாளர் திருப்பதி மற்றும் அவரது உற வினரான நாகராஜ் (19) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.   இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.