இராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் தமிழக அரசு சார்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாடு குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தமிழ்கனவு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். ஸ்டார்ட்அப் தமிழ்நாடு பிரிவின் மேலாண்மை இயக்குனர் சிவராஜா ராமநாதன் பேசினார். கல்லூரி முதல்வர் கணேசன் நன்றி கூறினார். இரண்டாயிரம் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.