districts

img

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

தேனி, நவ.8- தேனி மாவட்டத்தில் மழை குறைந்ததால் நீர் வரத்து குறைந்து சுருளி அரு வியில் சுற்றுலா பயணிகள்  குளிப்பதற்கு வனத்துறை யினர் அனுமதி வழங்கினர். கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாகவும் சுருளி அருவி நீர்வரத்து பகு தியில் நீர்வரத்து அதிகம் காணப்பட்டதால் சுருளி அரு வியில் நவம்பர் 4-ஆம் தேதி  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,  சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், தற்போது சுருளி அருவிக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ள தால், செவ்வாயன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவி யில் குளிப்பதற்கான தடை  நீக்கப்பட்டு, வனத்துறை யினர் அனுமதி அளித்துள்ள னர். இதனால் சுற்றுலா பய ணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். 70 அடிக்கு கீழ் வைகை அணை  வைகை அணை நீர்மட் டம் மீண்டும் 70 அடியை கடந்ததால் கூடுதல் தண் ணீர் திறக்கப்பட்டு மதுரை, தேனி, திண்டுக்கல் உள் ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழை இல்  லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து, வெளியேற்றப் படும் நீர்வரத்தும் சரிந்தது.  70 அடிக்கு மேல் நீடித்து  வந்த நீர்மட்டம் செவ்வா யன்று  காலை 69.98 அடியாக உள்ளது. வரத்து 1883 கன அடி. திறப்பு 1269 கன அடி. இருப்பு 5821 மி.கன அடி.  இதே போல் முல்லைப் பெரி யாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் செவ்வாயன்று காலை அணையின் நீர்மட்டம் 135.65  அடியாக உள்ளது. வரத்து 1544 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6030 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 120 கன அடி.  திறப்பு 40 கன அடி. சோத்துப்  பாறை அணை நீர்மட்டம் 126.60 அடி. வரத்து 173 கன  அடி. திறப்பு 30 கன அடி.