மதுரை, ஆக.18 - துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் நன்றி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது:
திண்டுக்கல் - கன்னியா குமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் - மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பால மும், சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டு மென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதற்கான நிர்வாக நடைமுறைகளை துவக்கி திட்ட அறிக்கையை தயார் செய்ய, கடந்த ஆண்டு அனுமதி வழங்கினார். நிலம் கையகப் படுத்துதல் பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கவனப் படுத்தினோம். மாவட்ட நிர்வாகம் அதனை விரைந்து முடித்துக் கொடுத்தது.
இந்த பின்னணியில் துவரிமான் - மேலக்கால் சந்திப்பில், நான்கு வழிச்சாலை யில் மேம்பாலமும், சுரங்கப் பாதையும் அமைக்க ரூ.46.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மதுரை மக்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி. விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறையும். எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எனது நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.