திண்டுக்கல், ஜுன் 20- ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராக திண்டுக்கல்லில் அனைத்து தொழிற்சங்க மாநாடு நடை பெற்றது. பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை வாபஸ் வாங்க வேண்டும். பொதுத்துறை நிறு வனங்களை விற்கக்கூடாது. குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வா யன்று நடைபெற்ற மாநாட்டிற்கு எல்.பி.எப் சங்கத்தின் மாவட்டக் கவுன்சில் செயலாளர் க.அழகர்சாமி தலைமை வகித்தார். அனைத்து தொழிற்சங்கங்களின் மாநில நிர்வாகிகள் எம்.மகேஸ்வரி (எல்.பி.எப்), கே.ஆர்.கணேசன் (சிஐ டியு), எஸ்.மகபூப்ஜான் (எம்.எல்.எப்), உமாராணி (ஐ.என்.டி.யு.சி.) ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மேலும் சு. சென்றாயன் (எல்.பி.எப்), கே.பிரபாகரன் (சிஐடியு), ஜி.பாலன் (ஏ.ஐ.டி.யு.சி), கே. ராஜாங்கம் (ஏ.ஐ.டி.யு.சி), என்.சையது இப்ராகிம் (எச்.எம்.எஸ்), எஸ்.பி.முருகன் (ஐ.என்.டி.யு.சி.), ஆர்.மோகன் (எம்.எல்.எப்), ஆகியோர் பேசினர்.