திருவில்லிபுத்தூர், ஆக.10- காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். விவ சாயிகளுக்கு விரோதமாக செயல்படும் வனத்துறை மாவட்ட துணை கண்கா ணிப்பாளர் திலீப் குமாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து விவசாய கூட்டமைப்பு சார்பில் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு விவசாயிகள்சங்க மாவட்ட தலைவர் விஜய முருகன் தலைமை தாங்கி னார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் முருகன் மற்றும் பல்வேறு விவசாயி கள் சங்க நிரவாகிகள் ராமச்சந்திர ராஜா, முத்தையா, காளிதாசன், மூர்த்தி .பெரு மாள் வழக்கறிஞர் ரமேஷ், ஜீவா, டாக்டர் சுரேஷ் கண்ணன், ஆகியோர் பேசினர். முடிவில் உதவி வன பாதுகாவலர் வேல் மணி நிர்மலாவிடம் விஜய முருகன் தலை மையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.