districts

img

ஆண்டிபட்டி ஒன்றிய கண்மாய்களுக்கு முல்லை பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுக!

தேனி, டிச.22-  ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களுக்கு முல்லை பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும்  என்று  அகில இந்  திய விவசாயத் தொழிலாளர் சங்கத்  தின் தேனி மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தேனி மாவட்ட 7 ஆவது மாநாடு ஆண்டிபட்டியில் வியாழனன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு தலைமை வகித்தார் .மூத்த தலைவர் பி. கருப்பசாமி சங்கக் கொடியை ஏற்றி  வைத்தார். மாவட்ட உதவித் தலை வர் ஏ.பெருமாள் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். வரவேற்புக்  குழு தலைவர் டி.வெங்கடேசன் பிரதிநிதிகளை வரவேற்று பேசி னார். மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் துவக்கவுரை யாற்றினார். வேலை அறிக்கையை எல்.ஆர்.சங்கரசுப்பு ,வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளா ளர் கே.தயாளன் ஆகியோர் சமர்ப்  பித்தனர். மாநிலச் செயலாளர்கள் எஸ். பூங்கோதை, ஏ.வி.அண்ணாமலை, மாநில நிர்வாகி வி.மாரியப்பன்,

சிஐ டியு தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்  ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலத் தலைவர் ஏ.லாசர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாற்றினார்.எஸ்.அய்யர் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள்  மாநாட்டில் மாவட்ட தலைவ ராக சி.வேலவன், மாவட்ட செய லாளராக எல்.ஆர்.சங்கரசுப்பு, மாவட்ட பொருளாளராக செளந்திர பாண்டியன், துணைத் தலைவர்  களாக கே.தயாளன் ,ஏ.பெரு மாள், ஆர்.காமராஜ், துணைச் செய லாளர்களாக மகாலட்சுமி, பி. இளங்கோவன், எஸ்.ஜெய்சக்தி  உள்ளிட்ட 25 பேர் கொண்ட நிர்வா கக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் வேலை அட்டை வைத்துள்ளவர்களுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்  டும். நகராட்சி, பேரூராட்சி பகுதி களுக்கு 100 நாள் வேலை திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும் .60 வயதானவர்களுக்கு நிபந்தனை யின்றி உதவித் தொகை வழங்க  வேண்டும். விவசாயத் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலி  சட்டத்தையும், நலவாரியத்தையும் அமலாக்க வேண்டும், கடமலை - மயிலை ஒன்றியத்தில் வன விவ சாயிகளை பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளிடமிருந்து விவ சாயத்தை பாதுகாக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.