தேனி ,செப்.28- தேனி ஒன்றியத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேனி ஊராட்சி ஒன்றியக்குழு அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அறிவித்தபடி முழு ஊதியம் வழங்க வேண்டும். 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை கோரிக்கை களை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.வெங்கடேசன், தாலுகா செயலாளர் இ. தர்மர்,சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி.ஜெய பாண்டி,வாலிபர் சங்க தாலுகா செயலாளர் டி.நாக ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் வட் டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.