districts

img

வருசநாட்டில் வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முற்றுகை

கடமலைக்குண்டு, நவ.8- தேனி மாவட்டம் வருச நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதி முக ஆட்சியின் போது விவ சாயிகள் பயிர் கடன் தள்ளு படிக்கு 627 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் 300 பயனாளி களுக்கு மட்டுமே கடன்  தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. 327 பயனாளிகளுக்கு தற்போது கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.  இதனை கண்டித்து செவ்வாயன்று காலை வருச நாடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயி கள் கூட்டுறவு சங்க அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்  போது தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவருக் கும் உடனடியாக பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், கடன் தள்ளுபடிக்கு உரிய நட வடிக்கை எடுக்காத வருச நாடு கூட்டுறவு கடன் சங்க செயலாளர் உள்ளிட்ட ஊழி யர்களை இடம் மாற்றம் செய்ய  வேண்டும் என கோஷங்கள்  எழுப்பினர். இதைத் தொடர்ந்து வருசநாடு போலீ சார் மற்றும் கூட்டுறவு சங்க  அதிகாரிகள் விவசாயிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தி னர். 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை யின் இறுதியில் பயனாளிகள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய உரிய நட வடிக்கை எடுப்பதாக கூட்டு றவு சங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் போராட் டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.