districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை அமைக்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம்

விருதுநகர், மார்ச் 16- விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டக் கூலி ரூ.  600 வழங்க வேண்டும். தனித்துறை யை அமைக்க வேண்டும். நகர்ப்புற வேலை திட்டத்திற்கு ஆயிரம் கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்து வரும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்றும்  100 வேலைத் திட்ட நிதியை கட்டிடம், சாலை அமைப்பு, பாலம் போன்ற கட்டு மானப் பணிகளுக்கு மாற்றம் செய்  யாமல்  தொழிலாளர்களின் கூலிக்கு  கூடுதலாக நிதி ஒதுக்கிட வேண்டும்.  வீடு இல்லாத அனைவருக்கும் இல வச வீட்டு மனைப்பட்டாவும் வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி வழங்கிட வேண்  டும் என்று வலியுறுத்தி மார்ச் 16  வியாழனன்று அகில இந்திய விவ சாயத்தொழிலாளர் சங்கம் சார்பில்  மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை தலை மையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் எம்.சுந்தர பாண்டியன் பேசினார். கோரிக்கை களை விளக்கி மாவட்ட பொருளா ளர் சி.ஜோதிலட்சுமி பேசினார். முடி வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் கே.அர்  ஜூனன் கண்டன உரையாற்றினார்.  விருதுநகர் மாவட்ட ஆறு களில் கருவேல மரங்களை அகற்றி, கரைகளில் மரக்கன்று, பனவிதை ஊன்றும் பணிகளை நூறு நாள் வேலைத் தொழிலாளர்களை பயன்படுத்தி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

மதுரை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப் பாட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் ஜெ.காசி தலைமை வகித்தார்.  துவக்கி வைத்து சிபிஎம் மூத்த தலை வர் சி.ராமகிருஷ்ணன் பேசினார். மாவட்டப் பொருளாளர் பி.ஆறு முகம், மாவட்டத் துணைத் தலை வர் எல்.கெளசல்யா, ஏ.தனசேக ரன், மாவட்டத் துணைச் செயலாளர் சொ.பாண்டியன், ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் நிறைவுரையாற்றினார். 300 பெண்  கள்  உட்பட 400-க்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சி யர் அலுவலகத்தில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

தேனி

தேனி ஆட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தேனி மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு தலைமை வகித்தார்.மாவட்டத்தலைவர் சி. வேலவன்,மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.பெருமாள் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ஆகி யோர் பேசினர். 300 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் மணியம்மா தலைமை வகித்  தார். மாவட்ட செயலாளர் பொன் னுச்சாமி, மாவட்ட பொருளாளர் முத்து கருப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விஸ்வ நாதன் ஆகியோர் பேசினர்.போராட்டத்தில் 200 பெண்கள் உள்பட 600 பேர் பங்கேற்றனர். போராட்ட முடிவில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. 

திண்டுக்கல் 

திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கம் முன்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. அருள் செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.    மாநில துணைத்தலை வர் மாரியப்பன்,   மாவட்ட தலை வர் வசந்தாமணி, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர் சச்சிதா னந்தம் ஆதரித்துப் பேசினார்.  

இராமநாதபுரம் 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக சங்க  மாவட்ட தலைவர் என்.கலையர சன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செய லாளர் கே கணேசன், மாவட்ட  பொருளாளர் ஆர்.சேதுராமு, தாலுகா செயலாளர் அழகேந்தி ரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன், சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் ஆர். குருவேல் ஆகியோர் பேசி னர் சிபிஎம் மாவட்ட செயலாளர்  வி. காசிநாததுரை ஆதரித்துப் பேசி னார்.  50 பெண்கள் உள்பட 250க்கும்  மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.