விருதுநகர், செப்.14- விருதுநகரில் புதிய பேருந்து நிலை யத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு கூட்டம் எம்.செல்வம் தலைமையில் நடைபெற்றது. நகரச் செய லாளர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் விளக்கிப் பேசினார். நகர்மன்ற உறுப்பி னர் ஜெயக்குமார், விஜயபாண்டி உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மாவட்டத் தலைநகரான விருது நகரில் கடந்த 31 வருடங்களாக செயல் பாடின்றி கிடக்கும் புதிய பேருந்து நிலை யத்தை உடனடியாக செயல்படுத்திட தமி ழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலை யங்களில் உள்ள மின்மோட்டார்கள் பல செயல்பாடின்றி உள்ளன. உடனடியாக மின் மோட்டார்களை சீர் செய்து குடி நீருடன் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் 2வது தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாது காக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும், பாத்திமாநகர் மெயின் ரோடு, ரயில்வே பீடர் சாலை, புல்லலக்கோட்டை சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் குண்டும் குழி யுமாக காட்சியளிக்கின்றன. இச்சாலை களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதான சாலை களை புதுப்பிக்க வேண்டும் என தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.