பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேநிலைப்பள்ளி மாணவி எஸ்.நந்தினியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாநகர் கிளைத் தலைவர் வைத்தியலிங்க பூபதி. செயலாளர் தாமோதரன், கவிஞர் செல்மாபிரியதர்ஷன், எஸ்.வனசேகரன் ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டி புத்தகங்களைப் பரிசளித்தனர்.