அபிராமி ராமநாதன் இல்லத்திலும் ரெய்டு!
சென்னை, நவ.4- வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை (நவ.3) பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர். இந்த சோதனை சனிக்கிழமையும் (நவ.4) நீடித்தது. கஸ்தூரி எஸ்டேட் டில் உள்ள பிரபல தொழில் அதிபர் அபிராமி ராமநாதனின் அலுவலகத்தி லும் சோதனை நடைபெற்றது.
மேலும் அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அபிராமி ராமநாதனை விசா ரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
தீபாவளிக்கு சென்னை சென்ட்ரல் - நெல்லை இடையே சிறப்பு ரயில்
சென்னை, நவ.4- தீபாவளிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லை க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை யொட்டி ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற் காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - நெல்லை இடையே 3 நாட் கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8, 15 மற்றும் 22 ஆம் தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06051) அடுத்த நாள் காலை 11.45 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 9, 16 மற்றும் 23 ஆம் தேதி களில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06052) அடுத்த நாள் அதி காலை 3.45 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கவுதமி புகார்: ஒருவர் கைது
சென்னை,நவ.4- திரைக் கலைஞர் கவுதமி, இரண்டு மாதத்திற்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கு சொந்தமான சொத் துக்களை அழகப்பன் என்பவரும் அவரது மனைவியும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். ரூ. 10 லட்சம் சொத்துக் களை அவர் ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து தன்னையும் தனது மகளையும் மிரட்டி வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் பாஜகவில் இருந்து வெளியேறிய கவுதமி, பாஜக கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் அழகப்ப னுக்கு துணை நிற்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை பிடிப்ப தற்கு காவல்துறை மூன்று தனிப்படை களை அமைத்துள்ளது. இதற்கிடை யில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டை யூர் நில வழக்கில் தொடர்்புடைய நில தரகர் பலராமனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் மீது தாக்குதல் : பாஜக நிர்வாகி கைது
சென்னை, நவ.4- சென்னையை அடுத்த குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த பாஜக நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழிமறித்து படிக்கட்டில் நின்று இருந்த மாணவர்களின் கண்ணத் தில் அடித்து அவர்களை பேருந்தி லிருந்து கீழே இறக்கி விட்டார்.
மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆபாசமாக பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பேருந்தின் நடத்துநர் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சனாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளி மாணவர்களை தாக்கிய ரஞ்சனா நாச்சியாருக்குப் பெற்றோர் களும், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.