districts

img

நெல் கொள்முதல் நிலையத்தில் 89 சிப்பத்தில் “ஆறு சிப்பம்” மாயம் அம்பலப்படுத்தியவர் மீது தாக்குதல்: கைது கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை மார்ச் 19-  நெல் கொள்முதலில் நடைபெற்ற பெரும் முறைகேட்டை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்யவலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மதுரை மாவட்டம்‌ மேலூர்தாலுகா பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர் வீ.அடக்கி வீரணன். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மதுரை மாவட்டப் பொரு ளாளர். இவர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு மார்ச் 4-ஆம் 89 சிப்பம் நெல்  கொடுத்துள்ளார். அதிகாரிகள் சிப்பத்திற்கு  ரூ.80 கேட்டுள்ளனர். அவர் மறுத்துவிட்டார். வழங்கிய நெல்லிற்கு ரசீது கேட்டுள்ளார். வழங்கமறுத்து காலம் தாமதம் செய்துள்ள னர். இது குறித்து மார்ச் 16-ஆம் தேதி மதுரை நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரை சந்தித்துப் புகார் அளித்துள்ளார். விசாரணையில் மார்ச் 4-ஆம் தேதி கொடுக்கப்பட்ட நெல்லிற்கு அன்றைய தினம் வரவு வைக்காமல் மார்ச் 9-ஆம் தேதி வரவு வைத்துள்ளனர். 89 சிப்பத்தை பெற்றுக்கொண்டு 83 சிப்பத்திற்கு வரவு  வைத்துள்ளனர். ஆறு சிப்பம் என்னவான தென்று தெரியவில்லை. இந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி நியாயம் வழங்க வலியுறுத்தி வீ.அடக்கி வீரணனை மேலூர் பதினெடாங்குடியை சேர்ந்த சதீஸ் தாக்கியுள்ளார்.  இதையடுத்து கொள்முதல் நிலையத்தில் நடக்கும் ஊழல்களைக் கண்டித்தும். விவசாயிகளுக்கு உரிய பலன்  கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மேலூரில் ஞாயி றன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க  மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச் சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.