சிவகங்கை, ஆக.4- காரைக்குடி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் குணசேகரன், ஆணையர் வீரமுத்துக் குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் நகர் பிரச்சனைகளை எடுத்து ரைத்தனர். இதற்கு நகராட்சித் தலை வர் முத்துதுரை பதிலளித்து பேசுகையில், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், நகராட்சி உறுப்பி னர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் அறிவித் துள்ள தமிழக முதல்வரு க்கு காரைக்குடி நகர்மன்றம் சார்பாக நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உறுதுணையுடன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன. வளர்ச்சி பணிகள் மேற் கொள்ள பொது நிதியில் இருந்து ரூ.3 கோடியே 96 லட்சத்து 95 ஆயிரம் ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் வார்டு பகுதிகளில் சிறு பாலங் கள், மழை நீர் வடிகால், கழிப் பறை பராமரிப்பு, குடிநீர் விநி யோக பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ரூ.6 கோடியில் கழனிவாசல் வார சந்தை யில் கடைகள் கட்டி தினசரி சந்தையாக மாற்றப்பட உள்ளது என்று தெரி வித்தார். நகராட்சித் துணைத் தலைவர் குணசேகரன் பேசு கையில், ‘‘கோயில் இடங் கள், அண்ணாநகர் இடையர் தெரு பகுதிக்கு வரி போட வேண்டும். பூங்காக்களில் சரியான பணியாளர்கள் இல்லாததால் பராமரிப்பி ன்றி கிடக்கிறது’’ என்றார். அதிமுக ராதா பேசுகை யில், ‘‘மதிப்பூதியம் வழங் கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம்’’ என்றார். தெய்வானை (திமுக ) கூறுகையில், ‘‘சாலைகளில் போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண் டும்’’ என்று கேட்டுக் கொண்டார், திமுகவின் கலா, ‘‘பருப்பு ஊரணியை சுத்தம் செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். பிரகாஷ் (அதிமுக), ‘‘பாலம் அமைத்ததற்கு நன்றி தெரிவித்தார் . கேஎம்சி காலனியில் குடிநீர் இணை ப்பு வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். திமுகவின் ஹேமலதா பேசுகையில், ‘‘மோசமான நிலையில் உள்ள ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் . சேத மடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். பல்வேறு நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி யின் தேவைகள் குறித்து பேசினர். அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகர் மன்ற தலைவர் முத்துதுரை பதிலளித்து ,பிரச்சனைகளு க்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.