districts

img

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட ரூ.1 லட்சம் வழங்கிய ஆசிரியை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீமானூத்து கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் ஆசிரியை அ.அமிர்தசிரோன்மணி பள்ளியின் வளர்ச்சிக்காக மேம்படுத்தப்பட்ட வகுப் பறை ( SMART CLASS) அமைப்பதற்காக  தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான  காசோலையை உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர். ஆசிரியை யின் செயலை வட்டார வளர்ச்சி அலுவலர் கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள்  பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.