கடலூர், ஏப்.3- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்.3 திங்க ளன்று முடிவடைந்தது இதில், கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் செய்தியாளர்கள் விசாரித்த போது, மாணவி கிரிஜா வின் தந்தை பழைய வண்டிப்பாளை யத்தை சேர்ந்த பொம்மை செய்யும் தொழிலாளி ஞானவேல் (45) திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்றனர். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி தெரிந்தும், மாணவி கிரிஜா 12 ஆம் வகுப்பு கடைசி தேர்வு என்பதால் எழுதினார் என்ற விவரத்தை தெரிவித்த னர். தனது தந்தை இறந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவி கிரிஜா, பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவி கள் ஆறுதல் கூறி தேர்வு எழுத ஊக்க மளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.