மதுரை, செப்.18- தமிழக அரசு சார்பில் இறந்தவர் களின் உடல்களை எரிப்பதற்கு மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சா யத்து, ஊராட்சிகளில் என பல்வேறு பகு திகளில் மின் மயானங்கள் அமைக்கப் பட்டன. குறைந்த கட்டணத்தில் ஏழை - எளியவர்கள் இறுதி காரியங்களை செய்ய இந்த மயானங்கள் பயன் பெற்று வந்தன. முன்பு மனிதர்கள் மூலம் விறகு கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்தி உடல்கள் எரியூட்டப்பட்டு வந்தது. இத னால் புகையாலும், வாடையாலும் குடி யிருப்பு வாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் காற்று மாசு அதி கம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் வகையில் அதிநவீன முறையில் மின் மயானம் அமைக்கப்பட்டது. கடந்த 2009 முதல் மதுரையில் தத்த னேரி, கீரைத்துறை மின் மயானங்களை அதிநவீன மின் மயானமாக மாற்றப் பட்டது. குறைந்த செலவில் உடலை எரியூட்டுவதற்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் தனியார் அமைப்புடன் மின் மயானங்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் மதுரை கீரைத் துறை மின் மயானத்தை மாநகராட்சி யுடன் ரோட்டரி கிளப் பராமரித்து வரு கிறது. எந்த மயானத்திலும் இல்லாத வகையில் காத்திருப்பு பகுதி, நவீன இருக்கைகள், குடிநீர் வசதி, கழிப்பறை கள் மற்றும் வளாகப் பகுதிகள் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரு கிறது. கொரோனா காலகட்டத்தில் நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்ட உடல்களை எளிதில் தகனம் செய்ய இந்த மயானம் பெரும் பங்கு வகித்தது. இந்த மயானத்தில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 உடல்கள் எரியூட்டப்படும். இந்த மயானத்தில் அனுப்பானடி, மேல அனுப்பானடி, கீழ அனுப்பானடி, சிந்தா மணி, கீரைத்துறை, தெற்குவாசல், மஹால், வில்லாபுரம், அவனியாபுரம், மீனாட்சிநகர், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், மதுரை மாநகராட்சி பகு தியில் பல்வேறு இடங்களில் இருந்து இறந்தவர்கள் உடல்களை எரியூட்டு வதற்கு கொண்டு வருகிறார்கள். ஒரு மணி நேரத்தில் எரியூட்டப்பட்டு அவர் களது அஸ்தியை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது மதுரை தத்தனேரி, கீரைத்துறை மின் மயானங்களை அதி நவீன முறையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், மிக எளிதில் உடல்களை தகனம் செய்ய எல்பிஜி சிலிண்டர் கொண்டு உடல்களை எரிப்ப தற்காகவும் ஜுவாலா எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்துடன் மதுரை மாநக ராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தப் பணிகளும் கடந்த 50 நாட்க ளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது தத்தனேரி மின்மயானத்தில் 4 எல்பிஜி சிலிண்டர் மூலம் உடல்களை எரிப்பதற்கும், கீரைத்துறை மின் மயா னத்தில் 2 எல்பிஜி சிலிண்டர்கள் மூலம் உடல்களை எரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. ஆனால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக இறந்தவர்கள் உடல்களை எரிப்பதற்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ஆட்களை வைத்து விறகுகள், எருவாட்டி ஆகிய வற்றை வைத்து இறந்தவர்களின் உடல் கள் எரிக்கப்பட்டு வருகிறது. இத னால் உறவினர்கள் நீண்டநேரம் காத்தி ருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அஸ்தியை பெறுவதில் காலதாமதம் ஆவதால் பணிக்கு செல்பவர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த வர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்ற னர். எனவே, விரைந்து மின் மயானப் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி பொறி யியல் பிரிவில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மதுரை மாநக ராட்சி சார்பில் இயங்கி வரும் தத்த னேரி மின் மயானம் மற்றும் கீரைத்துறை மின் மயானம் இரண்டும் அதிநவீன முறையில் எல்பிஜி சிலிண்டர் கொண்டு உடலை எரிப்பதற்கான பணிகள் மேற் கொள்ள ஜுவாலா என்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு தத்தனேரி மின் மயானம் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த வாரம் ஒத்திகை பார்த்த பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட உள்ளது. இன்னும் இரண்டு வாரங் களில் கீழத்துரை மின்மயானமும் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வர உள்ளது என தெரிவித்தார். மயான பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறுகையில், பணி கள் முடிந்து விட்டது. சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநக ராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுத் தால் சோதனை முடித்து அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்து பயன்பாட் டிற்கு வழங்கி விடுவார்கள் என்று தெரி வித்தனர்.