தேனி, மே15- ரேஷன் கடையை உடைத்து அரிசியை எடுக்க முயன்ற அரிசி கொம்பன் யானை கடையை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திருப்பியது. ரேஷன் கடை மற்றும் அருகில் உள்ள வீட்டை யானை சேதப்படுத்தியதால் தோட்டத் தொழிலா ளர்கள் அச்சமடைந்துள்ளனர். மூணாறு அடுத்துள்ள சின்னகானல், தேவிகுளம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி தாக்கி ஒன்பதிற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற அரிசிக் கொம்பன் யானையை நீண்ட போராட்டத்திற்கு பின்பு மயக்க ஊசி செலுத்தி பிடித்த கேரள வனத் துறையினர் கடந்த 30-ஆம் தேதி பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர். யானைக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கேரள வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் யானை பெரியார் வனப்பகுதியில் இருந்து மாவடி, வண்ணாத்திப்பாறை பகுதிக்குள் புகுந்து தமிழ்நாடு வனப்பகுதியில் நுழைந்தது. மேகமலை வனப்பகுதிக்குள் வந்த யானை அரசுப் பேருந்து, குடியிருப்பு களையும் சேதப்படுத்தி வந்தது. இதை யடுத்து மேகமலை மற்றும் அதைச் சுற்றி யுள்ள ஏழு மலைக் கிராம மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவும், சுற்றுலாப் பயணிகள் மேகமலை வரவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது . கடந்த சில நாட்களாக யானையின் தாக்கம் இல்லாமல் இருந்தது இதனால் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர் இந்தநிலையில் ஞாயிறு இரவு இரண்டு மணி அளவில் மணலாறு பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையை உடைத்து ரேஷன் அரிசியை எடுக்க முயன்றது. கடையை உடைக்க முடியாததால் யானை திரும்பச் சென்றுள்ளது ரேஷன் கடை அருகே ரேஷன் கடை ஊழியர் முருகானந்தம் என்பவரது வீட்டை சேதப்படுத்தி உள்ளது முருகானந்தம் தனது சொந்த ஊரான கூடலூருக்கு சென்றதால் உயிர் பிழைத்துள்ளார். இதனால் மலைக் கிராமங்களில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.