தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கீழடிக்கு மார்ச் முதல் வாரத்தில் வருகை தந்து அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டி கீழடியில் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வரும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.