districts

img

தென்னிந்திய ரோல்பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியினரை வழியனுப்பும் நிகழ்ச்சி

சின்னாளபட்டி, ஆக.14- கேரளத்தில் நடைபெறவுள்ள தென் னிந்திய ரோல்பால் போட்டியில், பங்கேற்கும் தமிழக அணியினரை வழியனுப்பும் நிகழ்ச்சி சின்னாள பட்டியில் நடைபெற்றது. தமிழகம், கேரளம், புதுச்சேரி, கா்நா டகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களைச் சோ்ந்த, 11 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டிகள், கேரள மாநிலம் கொல்லம் மாவட் டத்தில், திங்கள், செவ்வாய்க்கிழமை களில், (ஆக.14, 15-ஆம் தேதி) நடை பெறுகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணி வீரா்களுக்கானத் தோ்வு, கடந்த மாதம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில், ஆண்கள் அணிக்காக, 12 பேரும், பெண்கள் அணிக்காக, 12 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப் பட்ட, 24 பேருக்கும் கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப் பட்டியில் உள்ள, ராஜன் உள்விளை யாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப் பட்டது. இந்தப் பயிற்சியை ரோல்பால் சங்கத்தின் தென்னிந்திய செயலா் சுப்பிரமணி, தமிழ்நாடு ரோல்பால் கழகத்தின் மாவட்ட தலைவரும், சா்வதேச நடுவருமான பிரேம்நாத், ரோல்பால் சங்கத்தின் மாநிலச் செயலா் கோவிந்தராஜ், மூத்த பயிற்றுநா்கள் ராஜசேகா், பிரதீப், தீபக், அணி மேலா ளா் தங்கலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு, பயிற்சியளித்தனா். பயிற்சி பெற்ற, 24 பேரையும் தென்னிந்திய போட்டியில் பங்கேற்க வழியனுப்பும் நிகழ்ச்சி சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதுகுறித்து பயிற்சியாளா் பிரேம்நாத் கூறுகையில், தென்னிந்திய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியில் திண்டுக் கல், கோயம்புத்தூா், திருச்சி, சென்னை, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த, 24 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, சிறப்பாக பயிற்சி பெற்றனா். தென்னிந் திய போட்டியில் நிச்சயம் தமிழக அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றாா் அவர்.