மதுரை, ஜூன் 17- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருச்சி காட்டூர் பகுதி அம்மாகுளம் கிளைச் செயலாளர் தவுபிக்கை தாக் கிய கஞ்சா விற்கும் பாஜக நிர்வாகி மற்றும் குண்டர் களை கண்டித்தும் இக்கும் பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை யில் ஊர்வலம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் ஜெய்ஹிந்த் புரம் பகுதிக்குழு சோலை யழகுபுரத்தில் இருந்து வீர காளியம்மன் கோவில் வரை மாவட்டத் தலைவர் அ.பாவெல் சிந்தன் தலைமையில் ஊர் வலம் நடைபெற்றது மாவட்ட செயலாளர், த.செல்வா, மாவட்ட பொருளாளர் எஸ். வேல்தேவா, மாநில செயற் குழு உறுப்பினர் என். நிரு பனா, மாவட்ட துணை செய லாளர்கள் நவீன், செந்தில், துணை தலைவர் கௌதம் பாரதி, பகுதிக்குழு செயலா ளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுரை புறநகர் அவனி யாபுரம் பேருந்து நிலையத் தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் தமி ழரசன், மாவட்ட பொருளா ளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர். மாவட்ட நிர் வாகிகள் ஹரிகிருஷ்ணன், திருதரன், ராகுல், ஜோதி பாசு, மாவட்டக்குழு உறுப்பி னர் பாலா, பகுதிக்குழு தலை வர் மருதுபாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.