வேடசந்தூர் அருகே வானிலிருந்து விழுந்த மர்மப்பொருள்
திண்டுக்கல் மாவட்டம் முழு வதும் அடிக்கடி பயங்கர வெடிச்சக்தம் கேட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அருகே உள்ள தேவிநாயக் கன்பட்டி அருகே உள்ள கருமலை மற்றும் ரெங்கமலை பகுதியில் இந்திய நில அறிவியியல் துறை அதிகாரிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆய்வு நடத்தினர். இதில் பூமிக்கடியில் பாறைகளில் தங்கம், செம்பு, காப்பர், துத்தநாகம், காரி யம் உள்ளிட்ட 7 வகையான கனிம வளங்கள் வேர் போல கற்களுடன் பரவிச் செல்வதாக கூறப்பட்டது. இந்த கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்காக கருமலை முதல் ரெங்கமலை வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையைச்சுற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி அதில் இருமலைகளுக்கு இடையே உள்ள பட்டா விவசாய நிலங்களில் பாறை ஓட்டத்தின் அடையாளத்தை குறிக்கும் வகையில் 500 மீட்ட ருக்கு ஒரு அடையான கற்கள் ஊன்றி அதில் நம்பர் எழுதி குறி யீடு செய்னர். கள் ஊன்றப்பட்ட இடங்களில் பெரிய ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு நடத்தப்போவ தாக கூறப்பட்ட தகவல்கள் கூறப் பட்டது.
இதன் பிறகு திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட எல்லையில் உள்ள ரெங்கமலையின் மேல் கடந்த (3.4.2017) காலை 9.30 மணி முதல் 10 மணி வரை குட்டி விமானம் ரெங்கமலை பகுதியை சுற்றி சுற்றி வட்டமடித்து வந்தது. அதனைத்தொடர்ந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் அடிக்கடி நடந்து வந்தது இந்திய நில அறிவியியல் துறை சார்பில் இந்த ஆய்வு நடத்தினால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படும் என்று கூறி இந்த ஆய்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரி வித்ததால் அத்திட்டம் ஒன்றிய அர சால் கைவிடப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பயங்கர வெடிச்சக்தம் கேட்டவுடன் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையில் தனியார் பள்ளியில் வட்டவடிவிலான புகை யுடன் வானில் இருந்து பறந்து வந்து விழுந்தது. இந்த மர்மப்பொருளை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தோடு பார்த்த னர். இது குறித்து தகவல் கிடைத்தும் வடமதுரை காவல்துறையினர் விரைந்து வந்து மர்ம பொருளை ஆய்விற்கு அனுப்பிவைப்பதாக கூறி எடுத்துச்சென்றனர்.
நிபுணர் குழு முடிவுகளை ஆட்சியர் வெளியிட்டார்
திண்டுக்கல்/வேடசந்தூர், ஏப்.11- திண்டுக்கல் மாவட்டத்தில் 9 முறை தொடர்ந்து நடைபெறும் வெளிச்சத்துடன் கூடிய மர்மமான வெடிச்சத்தத்தினால் மக்கள் பீதி யடைந்துள்ளனர். இந்நிலையில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.3 அளவீட்டில் நிலநடுக்கம் கடந்த ஆண்டு ஏற்பட்டதாக நிபு ணர் குழு முடிவுகளை திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அதிர்ச்சிய ளிக்கும் வகையில் அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு: திண்டுக்கல் கிழக்கு, மேற்கு வட்டாரங்களிலும், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் வட்டாரங்களிலும் சக்தி வாய்ந்த ஒளியுடன் கூடிய மர்மமான வெடிச்சத்தம் இது வரை 9 முறை நடந்துள்ளது. தொடர்ந்து அனைத்து பத்திரிகைகளும் இது குறித்து எழுதி வந்துள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின் போது இந்த மர்மமான வெடிச்சத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அன்றைய மாவட்ட ஆட்சியர் வினய் இது குறித்து ஆய்வு நடைபெற்று வருவ தாக சொன்னார். ஆனால் இந்த வெடிச்சத்தத்திற்கான காரணத்தை சொல்ல மறுத்துவிட்டார்.
நிலநடுக்க வாய்ப்புள்ள பகுதி கீரனூர்
கடந்த ஆண்டு மார்ச் 25, 28, ஏப்ரல் 10 ஆம் தேதியும் கீரனூரில் நடைபெற்ற வெடிச்சத்தம் குறித்து ஆய்வு நடைபெற்றது. ரிக்டர் பதி வில் 1.5 மற்றும் 3.3. என்ற அளவீடு களில் பதிவாகியுள்ளது. நேசனல் சென்டர் ஃபார் சீஸ்மாலஜி இணை யதளத்தில் இது வெளியிடப் பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல் லாத அளவிலான நிலநடுக்கமாக பதிவு உள்ளது. திண்டுக்கல் ஆட்சி யர் விசாகன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க கடந்த 22.3.2023 அன்று வேலூர் வி.ஐ.டி. பேராசிரியர் ஜி.பி. கணபதி என்பவரும், 1.4.2023 அன்று சென்னை அண்ணா பல்கலைக் கழக புவியியல் மற்றும் நிலநடுக்க வியல் துறையின் நான்கு நிபு ணர்கள் கொண்ட குழுவும் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் நிலநடுக்கம் நடைபெற மிக குறைந்த வாய்ப்புள்ள 11 மண்ட லத்தில் பகுதி 2 இல் கீரனூர் அமைந்துள்ளது எனவே கீரனூரில் கடந்த ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள தெனவும் இதனால் கட்டிட பொறி யியல் தொழில் நுட்பத்தின்படி இந்தியன் ஸ்டாண்டர்ட் எர்த்கு வாக் கோட் கட்டுமானம் செய்யப் படாத மண் அல்லது கான்கிரிட் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள தெனவும் வேறு பாதிப்புகள் எது வும் இல்லை எனவும், அதன் பின்னர் நிலநடுக்கம் ஏதும் பதிவாக வில்லை எனவும் குழுவினர் தெரி வித்துள்ளனர்.
வெடிச்சத்தத்திற்கும் நிலநடுக்கத்திற்கும் தொடர்பில்லை
பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்து டன் தொடர்புடையது இல்லை என வும் இதனால் பொதுமக்கள் அச் சப்படத் தேவையில்லை பீதியடை யத் தேவையில்லை எனவும் குழு வினர் தெரிவித்துள்ளதாக ஆட்சி யர் அறிக்கையில் வெளியிட்டுள் ளார்.
மர்மமான வெடிச்சத்தம்
பெரும் ஒலியுடன் வெளிச்சத்து டன் கூடிய சிறு அதிர்வு நிகழ்வு குறித்தும் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆட்சியர் விசாகன் தெரிவித் துள்ளார். ஏன் இந்த வெடிச்சத்தம் நிகழ்கிறது. யாரால் நிகழ்த்தப்படு கிறது என்து குறித்து திண்டுக்கல் ஆட்சியர் தெரிவிக்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில கனிமவள சுரங்கங்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக் கச் செய்வதன் மூலம் இந்நிகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் வான் பகுதியில் விமானங்கள் 1200 கி.மீ வேகத்தில் பறக்கும் போது சோனிக் பூம் என்று சொல்லக்கூடிய சப்தம் கேட்பதற்கும் வாய்ப்புள் ளது என்றும் அறிக்கையில் ஆட்சி யர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் வான் பகுதியில் அடிக்கடி விமா னங்கள் பறக்கின்றன. பல சமயங்க ளில் தாழ்வாக பறக்கின்றன. எதற் காக இந்த விமானங்கள் திண்டுக் கல் வான் பகுதியில் பறக்கின்றன என்றும் மக்கள் கேள்வி எழுப்பு கிறார்கள். ஆனால் அப்படி விமா னங்கள் பறக்கும் போது சோனிக் பூம் வெடிச்சத்தம் நிகழ்வதில்லை. அதிக சக்தி வாய்ந்த வெடிகள் கனிம வள சுரங்கங்களில் வெடிக் கப்படுகின்றன. இதனை கட்டுப் படுத்த கனிவளத்துறை அதிகாரி கள் முன்வராததால் பெரும் சத் துத்துடன் கூடிய வெடிச்சத்தம் கேட்கிறது. இது குறித்து திண்டுக் கல் ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.